பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உதிர்;நோக்கும் உடல், உள ரீதியான பிரச்சினைகள்: சம்மாந்துறை மலையடிக் கிராமம் 01 ஐ மையப்படுத்திய ஓர் ஆய்வு

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka

Abstract

உரிமைகளையே மாற்றமடைகின்றது. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவமான வழங்கியுள்ளது. அது அவர்களின் இயல்புகளுக்கேற்ப தலைமைத்துவத்திற்கான பொறுப்பை ஆண்களுக்கே இஸ்லாம் வழங்கியுள்ளது. இதனால் பெண்கள் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்க முடியாது என்று சொல்ல முடியாது. அந்தவகையில் நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண் வருவதை இஸ்லாம் தடுக்கின்றது அதுவும் அந்த காலத்தில் ஏற்படும் நிலைமைகளைக் கொண்டு என ஏகோபித்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாக காணப்படுகின்றது. அவர்கள் சிறு சிறு அலகுகளாக காணப்படுகின்றவற்றுக்கு தலைமை வகிக்க முடியும். இதனால் குடும்பம் என்ற நிறுவனத்திற்கு ஆண்கள் இல்லாத போது தலைமைத்துவம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆய்வுப் பிரதேசமான மலையடிகிராமம் 01 சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவில் காணப்படும் ஒரு கிராம சேவகப்பிரிவாகும். இப்பிரதேசத்தில் 655 குடும்பங்கள் காணப்படுகின்றது. அதில் 112 குடும்பங்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பமாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள பெண் தலைமை ரீதியான பிரச்சினைகளை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் உடல், உள கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ் ஆய்வானது அளவு மற்றும் பண்பு சார் தரவுகளை மையமாகக் கொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளை பயன்படுத்தி ஆய்வுக்கான தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளாக வினாக்கொத்து, நேர்காணல் முறைகள், மூலமாக தரவுகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகளாக புள்ளிவிபரங்கள், நூல்கள், ஆவணங்கள் ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், பெறப்பட்டுள்ளன. இவ்ஆய்வின் இணையத்தளம் போன்றவற்றிலிருந்து தரவுகள் கண்டுபிடிப்புக்களாக பெண் தலைமைத்துவ குடும்பங்களின் உருவாக்கத்திற்குரிய காரணிகளாக வறுமை, விவாகரத்து, விதவை, இளவயது திருமணம், கைவிடப்பட்ட பெண் போன்ற பல காரணிகளால் பெண்கள் குடும்பத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் கலாசார ரீதியான, பொருளாதார ரீதியான, சமூக ரீதியான, குடும்ப ரீதியாக, உடல், உள ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளும் அதிகமாகும். அவ்வகையில், சம்மாந்துறை வாழ் முஸ்லிம் பெண் தலைமைத்தவ குடும்பங்கள் உடல், உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளையும், மற்றும் இது குடும்ப கட்டமைப்பில் பல தாக்கங்கள் ஏற்படுவதாக இவ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உடலியல் பிரச்சினைகளாக சுவாசப் பிரச்சினை, கண்பார்வை குறைபாடு, இடுப்பு வலி, கால் வலி, உடலுருப்புக்களை இழத்தல், மாதவிடாய்க் காலம் போன்ற பல பிரச்சினைகளை குறிப்பிடலாம். அந்தவகையில் பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், அன்பு, ஆன்மீகம் போன்ற அம்சங்களில் பெண்களால் கவனம் செலுத்த முடியாமல் போகின்றது உளவியல் ரீதியான பிரச்சினைகள் பற்றி நேர்காணலில் வினவிய போது அவர்களால் உளவியல் ரீதியாக பெண்கள் தூக்கமின்மை, மன அழுத்தம், சுத்தமின்மை, கவலை, சோம்பல், தற்கொலை எண்ணம், அவதூறுக்கு ஆளாகுதல், உணர்ச்சி அடக்கு முறை, பயம், மனச்சோர்வு, பாலினப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களுடைய பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுக்கு உளரீதியான பாதிப்புக்களுக்கு உட்படுகின்றனர். மத்தியில் அன்பு, அரவணைப்பு, கலந்து உறவாடல், பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுதல் போன்ற இருவழித் தொடர்பாடல் குறைந்து காணப்படுகிறது. இதனால் பிள்ளைகளது தேவைகள், ஆசைகள், விருப்பங்கள், பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அழுத்தம் அவர்களுக்குள்ளேயே புதைந்து வெளிக்கொணரப்படாத போது மன ஏற்படுகின்றது. இம் மன அழுத்தம் பயம், இயலாமை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது. ஆய்வின் முடிவில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளும் எதிர்கால ஆய்வுகளுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.

Description

Citation

Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)

Endorsement

Review

Supplemented By

Referenced By