பெரிய புராணத்திற்கு முன்னோடியாக பதினொராம் திருமுறை: அதனை சேக்கிழார் பயன்படுத்திய நுட்பம்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka
Abstract
சிவனடியார் வரலாற்றினையும் மெய்யடியார் வாழ்வியல் அனுபவங்களையும் விபரிக்கும் சைவ சமயப் பேரிலக்கியம் பெரியபுராணமாகும். இது சேக்கிழாரால் சோழர்காலத்தில் தொகுகக்ப்பட்டது. பதினொராம் திருமுறையில் அமைந்த நூலகள் நாற்பது பிரபந்தங்களாகும். பன்னிரு புலவர்கள் பாடிய நூலின் தொகுப்பாக இது அமைந்துள்ளது. சேக்கிழார் பெரியபுராணத்தின் மூலமாக திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகவும் திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரியபுராணத்தை படைத்தார். இவற்றுள் 11ஆம் திருமுறையை பெரியபுராணத்திற்கு முழுமையான முன்னோடியாக சேக்கிழார் கொண்டிருப்பாரா என்பது ஆய்வு பிரச்சினையாகும். இப்பிரபந்தத்தினை பேரிலக்கியமான பெரியபுராணத்திற்கு முன்னோடியாக அமைந்த விதம், அவற்றினை பயன்படுத்திக் கொண்ட நுட்பங்கள், அதில் சேக்கிழாரது நுட்பம் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்வதே ஆய்வின் நோக்கங்களாகும். திருமுறைகளில் சேக்கிழாரது பெரியபுராணமும், பதினொராந் திருமுறையுமே ஆய்வின் எல்லையாக கொள்ளப்படுகின்றன. இவ்வாய்வின் முதல் நிலைத் தரவுகளாக பெரியபுராணமும் பதினொராந் திருமுறையும் கொள்ளப்படுகின்றது. இரண்டாம் நிலைத்தரவுகளாக பெரியபுராணம் தொடர்பாக வெளிவந்த நூல்களும் பிற ஆக்கங்களும் அமைகின்றன.
Description
Keywords
Citation
5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 43-46.
