ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்: சமகாலத் தொய்வுகளும் அவசியமான சீர்திருத்தங்களும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka
Abstract
இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை தேசிய இனமான முஸ்லிம்கள் மிக நீண்டகால அரசியல் வரலாற்றினைக் கொண்டவர்கள். காலனித்துவ காலத்தில் மத, கலாசார மறுமலர்ச்சியுடன் ஆரம்பித்த முஸ்லிம் அரசியல், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிற்பாடு சிங்கள பௌத்த தேசியத்துடனும் தமிழ் தேசியத்துடனும் இரண்டறக் கலந்திருந்தது. இருந்தபோதிலும் 1980 களுக்குப் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்த அசாதாரண சூழ்நிலை முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் இயக்கமொன்று தோற்றம் பெறுவதனை இயலுமானதாக்கியது. இவ்விதம் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரஃபினால் முஸ்லிம்களுக்கென தோற்றுவிக்கப்பட்ட அரசியல் இயக்கமே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். இவ்வியக்கம் முஸ்லிம்களுக்கென தனித்துவ அரசியல் அடையாளத்தினை பெற்றுக் கொடுத்ததுடன் அஷ்ரஃபின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய அரசியலில் மிகவும் வீரியத்துடன் செயற்பட்டது. எனினும் அஷ்ரஃபின் திடீர் மறைவு அவர் உருவாக்கிய அரசியல் இயக்கத்தினை பிளவுபடுத்தியதுடன் முஸ்லிம் அரசியல் வீழ்ச்சியுறுவதற்கும் காரணமாக அமைந்தது. இப்பின்புலத்தில் இலங்கை முஸ்லிம் அரசியலின் மிக முக்கிய அங்கமாகத் திகழும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகாலத் தொய்வுகளையும் அதிலிருந்து மீள்வதற்கு அவசியமான சீர்திருத் தங்களையும் இக்கட்டுரை அலசுகிறது.
Description
Citation
Kalam, Research Journal of Faculty of Arts and Culture. Volume 12 (I). pp 1-16. Issue-I. 2019
