திருக்கோவில் பிரதேச புனைகதை இலக்கியம் - ஓர் ஆய்வு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

South Eastern University of Sri Lanka

Abstract

தமிழ் இலக்கிய வரலாற்றில் புனைகதை இலக்கியம் பரந்துபட்ட விரிவுடையதும் சமூகத்தின் அனைத்து விடயங்களையும் தெளிவாகப் பிரதிபலிக்கும் இலக்கிய வடிவமும் ஆகும். ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இத்தகு புனைகதை இலக்கியப் படைப்புக்களின் பெரு வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. எனினும் ஈழத்தைப் பொறுத்தவரையில் பல புனைகதை இலக்கியங்கள் இற்றை வரையும் நூலுருப்பெறா வண்ணம் காணப்படுவதோடு சில முக்கிய புனைகதை இலக்கியங்கள் பெயரளவில் மட்டும் அறியப்படும் ஒன்றாகவே காணப்படுகின்றன. பிரதேச அடிப்படையில் நோக்கும் பொழுது ஏராளமான புனைகதை இலக்கியங்கள் தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனடிப்படையில் ஈழத்துப் புனைகதை இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிட்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்திய திருக்கோவில் பிரதேச புனைகதை இலக்கியங்களின் அறிமுகம், உருவ, உள்ளடக்க விடயங்கள், முக்கியத்துவம் போன்ற விடயங்கள் இவ்வாய்வினூடே விளக்கியுரைக்கப்படுவதோடு புனைகதை இலக்கியப் படைப்பாளர்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தைச் சேர்ந்தோர் இடம், புலம் பெயர்ந்து உள்ளமையினால் அவர்களின் படைப்புக்களும் இவ்வாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப் பிரதேச புனைகதை இலக்கியங்கள் தொடர்பான விளக்கத்தினை இவ்வாய்வு உள்ளடக்கியுள்ளது.

Description

Citation

6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 865-872.

Endorsement

Review

Supplemented By

Referenced By