சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் குடியுரிமைச் சட்டங்கள்: ஒரு வரலாற்று நோக்கு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, Oluvil.
Abstract
எந்தவொரு மனிதனதும் அரசியல் வாழ்வில் குடியுரிமை என்பது அடிப்படையான
உரிமைகளுள் ஒன்றாக உள்ளது. குடியுரிமை மறுக்கப்படுவது அரசியல் வாழ்வை
மட்டுமன்றி சமூக, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்று அனைத்துத் துறைகளிலும்
பாதகமான தாக்கங்களை ஏற்படுத்த வழிவகுக்கும். பல்லின சமூகக் கட்டமைப்புக்
கொண்ட நாடுகளில் அரசையும் தேசத்தையும் கட்டியெழுப்புதல் செயன்முறையில்
குடியுரிமைச் சட்டங்கள் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளன. இலங்கையிலும்
குடியுரிமைப் பிரச்சினை என்பது மிக அண்மைக்காலம் வரை தீர்க்கப்படாத ஒன்றாகவே
இருந்து வந்துள்ளது. அந்தவகையில், இவ்வாய்வுக் கட்டுரையானது இலங்கையில்
குடியுரிமைச் சட்டங்களின் வளர்ச்சி பற்றியும் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில்
இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றியும் வரலாற்று
ரீதியில் நோக்குவதாக உள்ளது. முழுவதும் இரண்டாம் நிலைத் தகவல்களை
அடிப்படையாகக் கொண்டமைந்த வரலாற்றாய்வாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிகவும் பங்களிப்புச் செய்துவந்துள்ள ஒரு
சமுதாயத்தின் குடியுரிமை மறுக்கப்பட்டு வந்தமை அரசியல் நோக்கிலான
பெரும்பான்மையினரின் செயற்பாடு என்பது இவ்வாய்வின் ஊடாக
கண்டுடறியப்பட்டுள்ளது.
Description
Citation
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,13(3), 2020. pp121-134.
